துவாதசி நாளில் வாழை சம்பந்தமான காயோ, பழமோ சாப்பிடக்கூடாது என்று ஶாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு விஞ்ஞான ரீதியாக என்ன காரணமென்றால், முதல் நாள் ஏகாதசி அன்று உபவாசம் இருப்பதினால், நம் உடம்பில் வாய்வு ஏற்பட்டிருக்கும் (gastric). வாழை என்பது அந்த வாயுவை கூடுதலாக்குமே தவிர குறைக்காது ஆகையால் அதைச் சாப்பிடக்கூடாது என்று வைத்திருக்கலாம். ஆசாரமும் ஆரோக்யமும் கலந்ததே நம் சம்ப்ரதாயம் என்று இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.