ஸ்திரீகள் ஸ்ரீமத் பாகவதம் மூலம் படிக்கும் வழக்கமில்லை. தமிழ், ஆங்கிலம் என எந்த மொழியிலும் ஸ்ரீமத் பாகவத உரையைப் படிக்கலாம்.
சமீபகாலத்தில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கென்று தனியாக பதிப்பகம் இன்னும் வரவில்லை. திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பாக பல பாடங்களொடு ஸ்ரீமத் பாகவதம் வெளியிட்டுள்ளனர். ஆனால் அது சற்றே பெரிய புத்தகமாகும். இப்போதைக்கு ஆங்காங்கே கிடைக்கும் கீதா ப்ரஸ் முதலிய பதிப்பகங்களின் வெளியீட்டைப் பாராயணத்திற்கு உபயோகிக்கின்றோம் அதில் பெரியளவில் வித்யாசங்கள் இல்லை. மொழிபெயர்ப்பு, உரை பொருத்தவரையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் பௌண்டரீகபுரம் ஆஶ்ரமத்தில் இரண்டு ஸ்கந்தம் வரை வெளியிட்டுள்ளனர். பழைய புத்தகங்கள் உண்டு ஆனால் அவையெல்லாம் இப்போது கிடைக்காது.