நெருங்கிய உறவினரை இழந்தவர்க்கு ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷையில் இரங்கல் தெரிவிப்பது எப்படி?

பொதுவாக எல்லோரும் தெரிவிப்பது போல் நாமும் தெரிவித்துக் கொள்ளலாம். உங்கள் துக்கத்தில் நான் பங்கு கொள்கிறேன், நம்மால் என்ன செய்ய முடியும், பகவத் சங்கல்பம் என்று ஒன்று உள்ளது, நாம் எல்லோரும் அதற்குக் கட்டுப்பட்டவர்கள், முதலானவைகளைதான் சொல்ல முடியும். நாமும் தெரிவித்துக் கொள்ளலாம். அவ்வாறு சொல்லும் பொழுது பகவத் சங்கல்பத்தை விடாமல் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
யாராவது பெரியோர்கள் (அம்மா/அப்பா) பரமபதித்து விட்டால் மாத்ரு கைங்கர்யம்/பித்ரு கைங்கர்யம் ப்ராப்தம் ஆயிற்று போல் இருக்கிறது என்று பரிபாஷையாக விசாரிக்கலாம்.
மிகவும் பெரியவர்களாக இருந்தால் பரமபதத்தில் கைங்கர்யத்திற்குப் பெருமாள் அவர்களை அழைத்துக் கொண்டு விட்டார் என்று விசாரிக்கலாம்.
இளையவர்களாக இருந்தால் பகவத் சங்கல்பம். ஏதோ இப்படி ஆகிவிட்டது என்ன செய்வது என்று விசாரிக்கலாம்.
இவை துக்கம் விசாரிக்க ஸ்ரீ வைஷ்ணவ பரிபாஷைகள்.
திரு நக்ஷத்திரமாக இருந்தால், அடியேன் சேவித்துக் கொள்கிறேன். ஸ்வாமி தண்டம் ஸமர்ப்பித்துக் கொள்கிறேன், அநுக்ரஹிக்க வேண்டும் என்று வைஷ்ணவ பரிபாஷையில் ப்ரார்த்தித்துக் கொள்ளலாம். வேண்டுமானால் திருப்பல்லாண்டு பாடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top