முனித்ரய மற்றும் கோபாலார்ய தேசிக சம்ப்ரதாயத்தைப் பின்பற்றுபவர்கள் ஸ்ரீஜயந்திக்குப் பின் எப்பொழுது பாரணை பண்ண வேண்டும்.

ஸ்ரீஜயந்தி வ்ரதம் இருப்பவர்கள் மறுநாள் காலையில் பாரணை செய்யவேண்டும். ஆனால் அந்தப் பாரணை செய்யும் காலத்தில் அஷ்டமி, ரோஹிணி இந்த இரண்டில் ஏதாவது ஒன்று போயிருக்கவேண்டும். அஷ்டமி ரோஹிணி யோகம் என்று சொல்வார்கள். இரண்டும் சேர்ந்து இருந்தால் அது சேர்ந்து இருக்கும்வரை வ்ரதம் இருக்கவேண்டும். அதில் ஏதாவது ஒன்று பிரிந்தவுடன் பாரணை செய்யவேண்டும். இந்த வருடம் அப்படிதான் வந்தது மறுநாள் சாயங்காலம் 4 மணிவரை சேர்ந்து இருந்தது. அதற்குப் பிறகுதான் பாரணை என்பதாக ஆயிற்று.
ஒருவேளை அஷ்டமி ரோஹிணி யோகம் மறுநாள் இல்லை என்றால் காலையிலே வழக்கம்போல் 6நாழிகைக்குள் பாரணை பண்ணவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top