அடியேனுடைய அப்பாவிற்கு பங்காளி(பெரியப்பா/சித்தப்பா வினுடைய பார்யாள்) தீட்டு. பத்து நாள் தீட்டு காக்கப் பட்டது. அவர் வரும் நாட்களில் பண்டிகைகள் கொண்டாடலாமா

இந்தக் கேள்வியில், வரும் நாட்களில் பண்டிகை கொண்டாடலாமா என்று கேட்கப்பட்டிருக்கிறது. ஒரு வருடத்திற்குள் இவ்வளவு நெருக்கமான உறவுக்காரர்கள் போனால் பண்டிகை கொண்டாடுவதா கொண்டாடுவது இல்லையா என்பதே ஒரு ஒரு க்ருஹத்தின் வழக்கத்தின் படி மாறுபட்டு இருக்கும்.
சில க்ருஹங்களில் வருஷம் முழுதும் சித்தி பெரியம்மா போனால் பண்டிகைகள் கொண்டாடாமல் இருப்பார்கள். சில க்ருஹங்களில் கொஞ்சம் குறைத்துக் கொண்டாடுவது என்று வைத்திருப்பார்கள். ஆனால் பண்டிகை அன்று மாசியம் வருகிறது என்றால் கொண்டாடாமல் இருப்பது உசிதம். ஒரு வருடம் முடிந்த பிறகு பண்டிகை அன்று அவருடைய ஶ்ராத்தம் வருகிறது என்றால் அன்று பண்டிகை கொண்டாடாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. உதாஹரணத்திற்கு ஜயந்தி அன்று ஒருவர் பரம பதித்து விட்டார் என்றால் அந்த ஸ்ரீ ஜயந்தி அன்று பண்ணும் கர்த்தா மட்டும்தான் பண்டிகை கொண்டாட முடியாது (ஒரு வருடத்திற்குப் பின் வரும் ஶ்ராத்தம்) மற்றபடி அவாளுடைய உறவினர்கள் எல்லோரும் பண்டிகை கொண்டாடுவது என்பது உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top