அமாவாஸை அன்று எல்லோருமே இராத்திரி பலகாரம் பண்ணவேண்டும் என்று ஒரு வசனம் இருக்கிறது. அது தர்ப்பணத்திற்காக (தர்ப்பணா ப்ரயுக்தமில்லை) இல்லை.
தர்ப்பணம் பண்ணுபவர்கள் தர்ப்பணத்திற்காக பலகாரம் பண்ணுவது என்பது வேறு. எல்லோருமே அமாவாஸை திதியன்று இரவு போஜனம் செய்யக்கூடாது என்ற வசனத்தைப் பின்பற்றி இரவு சாதம் சேர்த்துக்கொள்வதில்லை.
சில சமயம் முதல் நாள் இராத்திரி காலத்திலே அமாவாஸை வந்துவிடும் மறுநாள் காலை மற்றும் சாயங்காலம் வரை அமாவாஸை இருக்கும் பக்ஷத்தில் தர்ப்பணம் மறுநாள்தான் வரும், அமாவாஸைகாரர்கள் (திதிப்படி பலகாரம் பண்ணுபவர்கள்) முதல் நாள் இராத்திரி சாப்பிடக்கூடாது என்று வரும்.
இதை இரண்டாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். தர்ப்பணத்திற்காக பலகாரம் என்பது தர்ப்பணக்காரர்கள் மட்டும்தான் பண்ணவேண்டும் மற்றவ்கள் பண்ணக்கூடாது. அமாவாஸைக்கான பலகாரம் சின்னக்குழந்தையில் ஆரம்பித்து எல்லோருமே கடைப்பிடிப்பது என்று சில வைதீகக்கார்கள் பின்பற்றி வருகின்றனர். ஆனால் இது திதி எப்போது என்பதை பொறுத்தது.
குறிப்புகள்:
பல க்ருஹங்களில் அமாவாஸை தினத்தன்று தர்ப்பணம் மட்டுமே இரவில் பலகாரம் பண்ண வேண்டும். க்ருஹத்தில் இருக்கும் மற்றவர்கள் எல்லோரும் அதாவது முக்கியமாக ஸ்த்ரீகள் குழந்தைகள் எல்லோரும் ஒரு பருக்கையாவது சாதம் சாப்பிட வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.
அதனால் இரண்டு விதமான கருத்துக்களும் உண்டு. அவரவர்கள் பெரியோர்கள் எந்த வழியை காண்பிக்கிறார்களோ அதே வழியில் செல்லலாம்.