சிறியதகப்பனார் ஆசார்யன் திருவடி அடைந்தபிறகு அவருக்காக நீங்கள் செய்யவேண்டிய குழித்தர்ப்பணம், தீட்டுக்காத்தல் முதலியவையை செய்திருப்பீர்கள். அதற்குப்பிறகு நீங்கள் செய்யவேண்டியவை ஒன்றுமில்லை.
ஒருவருட காலம் மலையேறி பெருமாள் சேவிக்கக்கூடாது, ஸமுத்ர ஸ்நானம், தீர்த்தஸ்நானம் செய்யக்கூடாது என்பதெல்லாம் சாக்ஷாத் கர்த்தாவிற்கு மட்டும்தான் மற்றவர்களுக்கில்லை.
பண்டிகை விஷயத்தில் மிகவும் ஆடம்பரமாகச் செய்யாமல் செய்யவேண்டியவதை மட்டும் செய்யலாம். காரணம் நம் பண்டிகைகள் எல்லாம் பெருமாளுக்கு ஆராதனம் செய்வதானபடியினாலே பெரியளவில் இல்லாமல் லகுவாகச் செய்யலாம்.