வெளிநாட்டில் வாழும் எங்களால், ஸ்ரீரங்கம் போன்ற பஞ்சாகங்களைப் பின்பற்ற முடியவில்லை நாங்கள் இணையதளத்திலுள்ள பஞ்சாங்கத்தைத் தான் பின்பற்றி வருகிறோம் ஆகையால் எங்களைப் போன்றோருக்காக ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி நிர்ணயம் அருள ப்ராத்திக்கிறேன்.a. ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி வைகாசி ஸுக்ல பக்ஷ – த்ரயோதசியா அல்லது சதுர்தசியா?b. அவதார கால திருவாரதனைக்கு சூர்யோதயம் அல்லது சூர்ய அஸ்தமன திதி பின்பற்ற வேண்டுமா?c. குறைந்த பக்ஷம் 6 நாழிகையாவது திதி (சூர்ய உதயமோ/அஸ்தமனமோ) இருக்க வேண்டும் என்று இருக்கிறது அப்படியில்லாவிட்டால் அடுத்த நாளில் செய்ய வேதை/தோஷத்தின் விவரங்கள் அளிக்க வேண்டுகிறேன்.

ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி என்பது வைசாக மாதத்தில் வரும். வைசாக மாதம் என்பது சித்திரை அமாவாஸைக்குப் பிறகு வைகாசி அமாவாஸை வரை 30 நாட்கள். ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி திதி என்பது சுக்ல பக்ஷ சதுர்தசி திதி ஆகும்.
அதில் த்ரயோதசியோடு வேதை(சம்பந்தம்) கூடாது. அதாவது 6 நாழிகை காலம் த்ரயோதசி சம்பந்தம் இருந்தால் அன்று ஆறு நாழிக்கு பின் சதுர்தசி இருந்தால்கூட அன்று ந்ருஸிம்ஹ ஜெயந்தி கொண்டாடக்கூடாது. மறுநாள் தான் ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி பண்ண வேண்டும். 6 நாழிகை த்ரயோதசி சம்பந்தமில்லாத சதுர்தசி என்பது ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்திக்கு காலம்.
மறுநாள் சதுர்தசி சூரியோதய காலத்திலாவது இருக்க வேண்டும், அப்படி இருந்தால்தான் அன்று ந்ருஸிம்ஹ ஜயந்தி. அப்படி சூரியோதய காலத்தில் சதுர்தசி இல்லாவிட்டால், முன்னாள் (முதல் நாளே) அந்த த்ரயோதசி சம்பந்தம் இருந்தால் கூட வேறு வழியே இல்லாமல் அன்றே ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் என்பதாக ஒரு நிர்ணயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top