அடியேனின் பரந்யாஸ ஆசார்யன் திருக்குடந்தை ஆண்டவன். நீண்டகாலமாக கிராமத்து கோவிலில் ப்ரதோஷம் உபயம் எங்கள் ஆத்து பெரியோர் செய்து வந்தனர். இப்போது சென்னைக்கு வந்துவிட்டோம். இப்போது அதைத் தொடரலாமா, பணம் அனுப்புவது தவறாகுமா. இல்லை ப்ரதோஷத்தன்று அந்தக் கோயிலில் நேரே போய்தான் செய்யவேண்டுமா?

ப்ரதோஷத்திற்கு ந்ருஸிம்ஹ உபயம் என்றால் அதை நிச்சயம் பண்ணலாம். நேரே போகமுடிந்தால் நல்லது இல்லையென்றால் ந்ருஸிம்ஹ திருமஞ்சனத்திற்குத் தேவையான த்ரவ்யத்தை ஸமர்பிக்கவும் செய்யலாம், இயன்ற ப்ரதோஷத்தின்போது நேரே சேவித்துவிட்டு வரலாம்.
வேறு இதர கோயில் உபயமாக இருந்தால் பண்ணவேண்டிய அவசியமில்லை, பண்ணாவிட்டால் தப்பில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top