சென்ற சுதர்சனம் இதழில் அடியேன் ப்ரபத்தி செய்யும்போது மடி ஆசாரம் கடைபிடிக்க வேண்டுமா என்ற அடியேனின் சந்தேகத்திற்கு ஸ்வாமியின் மூலம் பதிலை அறிந்துகொண்டேன். மேலும் அதில் நம்மால் இயன்றளவு மடியோடு இருக்கவேண்டுமென்றும் வேறுவழியில்லை என்றபோது விழுப்புடன் செய்வது பரவாயில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அடியேனுக்கு ப்ரக்ருதம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் மூலம் பரந்யாஸம் ஆனது. அன்றைய தினம் அடியேன் உடுத்திய கச்சம் மடியில்லை. இக்கேள்வியின் பதிலைக்கண்டு அன்று மடியின்றி பரஸ்மர்ப்பணம் செய்துகொண்டோம் என மிகவும் வருத்தமாகவுள்ளது. மேலும் இதனால் ஏதேனும் பாபம் உண்டாகுமா என்று தெளிவிக்க வேண்டுகிறேன்.

பரஸமர்ப்பணம் பண்ணிய சமயம் மடியில்லாத வஸ்த்ரத்தை தெரிந்தே உடுத்திக்கொண்டு போயிருந்தால் தவறுதான், தெரியாமல் செய்திருந்தால் தவறில்லை. இதற்கும் பண்ண பரஸமர்ப்பணத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
பொதுவாகவே பெரியவர்கள், முக்கியமாக ஆசார்யர்களைச் சேவிக்க போகும்போது சுத்தமாகதான் போக வேண்டும்.
தெரிந்தே பண்ணியிருந்தால் பாபந்தான். அதற்குப் பெருமாளிடமே மன்னிக்கும்படி ப்ரார்த்திப்பதுதான் ஒரே வழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top