அமாவாஸை அன்று, அப்பா இருக்கிறவர்கள் தலைக்கு தீர்த்தமாடக்கூடாது என்று சிலரின் ஆசாரத்தில் உண்டு, குறிப்பாகத் தெற்கு பக்கத்தில் அவ்வாசாரம் இருக்கிறது.
நித்யபடி திருவாராதனம் பண்ணுபவர்கள், நித்யபடியே தலைக்கு தீர்த்தமாடுபவர்கள் அன்றும் தீர்த்தமாடுவதில் தப்பில்லை. மேலும், திருவாராதனம் பண்ணுவதாக இருந்தால் தீர்த்தமாடி பண்ணுவதுதான் நியாயம்.