கொடியில் உலர்த்திய மடி வஸ்த்ரத்தை ப்ளாஸ்டிக்கவர் கொண்டு எடுக்கலாமா அல்லது மரக்குச்சியில் தான் எடுக்கவேண்டுமா? ப்ளாஸ்டிக்கவர் கொண்டு எடுத்தால் அது விழுப்பாகிவிடுமா? அறியாமல் கேட்கிறேன் தவறாக இருந்தால் க்ஷமிக்கவும்.

கொடியில் உலர்த்தியிருக்கும் மடி வஸ்த்ரத்தை ஒரு கோல் அல்லது மரக்குச்சியினால் தான் எடுக்கும் வழக்கமுள்ளது. ப்ளாஸ்டிக் என்பது நவீன வஸ்து, ஶ்ரார்த்தம் போன்ற சுத்தமாக இருக்கும் சமயங்களில் ப்ளாஸ்டிக்கை தொடுவதில்லை.
கம்பளி கொண்டு கூட வஸ்த்ரம் எடுப்பதுண்டு, ப்ளாஸ்டிக்கவர் கொண்டு வஸ்த்ரம் எடுப்பதென்பது பெரியவர்களின் ஆசாரத்திலும் இல்லை வழக்கத்திலும் இல்லை. அதனால் அது விழுப்பா என்ற கேள்விக்குமிடமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top