அடியேன் பணியில் இருக்கும் நேரம் அலுவலகத்தின் உணவகத்தில் தினசரி வெங்காயம் பூண்டு சேர்த்த உணவை உட்கொள்ள வேண்டி உள்ளது. அலுவலகம் சென்று திரும்ப மிகுதியான நேரம் ஆகிறது. மாலை ப்ரயாணத்தில் (வெங்காயம் பூண்டு சாப்பிட்ட பின்) கிடைக்கும் நேரத்தில் ஸஹஸ்ரநாமம் சொல்லலாமா? வீடு திரும்பியவுடன் கைகால் வாய் மட்டும் சுத்தம் செய்து சந்தியாவந்தனம் செய்யலாமா?

வெங்காயமும் பூண்டும் ஒருகாலும் சேர்த்துக்கொள்ளக் கூடாது. அவை நிஷித்தமான வஸ்துக்கள். எந்தக் காரணமோ சாக்கோ சொல்லி, அவற்றை சேர்த்துக்கொள்ளக் கூடாது. இவை இரண்டுமே மோசமான வஸ்துக்கள். அதனால் அவை இரண்டையும் தவிர்க்க வேண்டும் என்பதே இதனுடைய நேரான பதில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top