உபநயனம் மற்றும் சீமந்தோந்நயனத்தில் முஹூர்த்த காலம் முடியும்வரை போஜனம் கூடாதென்று இருக்கிறது இதன் தாத்பர்யம் என்ன என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

நாந்தி ஶ்ரார்த்தம் என்று உபநயனம் மற்றும் சீமந்தோந்நயனத்திற்கு உள் அங்கமாக ஒன்று உண்டு. அது ஒரு மங்கள கார்யம். நம் பித்ரு பிதாமஹர்களைக் குறித்து தக்ஷிணையாக சில ப்ராமணர்களுக்கு கொடுக்கும் வழக்கம். ஆத்து வாத்யார் பண்ணி வைப்பார்.
இப்படி விசேஷமான நாந்தி ஶ்ரார்த்தம் பண்ணுவதால் அதுவரை போஜனம் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம்.
இன்று இதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் போஜனம் கூடாது என்பதற்கு நிச்சயம் ஒரு அர்த்தமும் காரணமும் உண்டு என்பதை புரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top