பஞ்சாங்கங்களில் திருவோண நக்ஷத்ரம் என்றைக்கு (இரவு)இராத்ரி வேளையில் இருக்கிறதோ அன்றைக்கு ஶ்ரவண விரதம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால், ஒப்பிலியப்பன் கோவிலை உத்தேசித்து ஶ்ரவண விரதத்தை உப்பில்லாமல் அனுசரிப்பவர்கள், என்றைக்கு சூர்யோதயத்திலிருந்து 12 நாழிகை திருவோண நக்ஷத்ரம் இருக்கின்றதோ அன்றைக்குதான் ஒப்பிலியப்பன் கோவிலில் ஶ்ரவண தீபம் எடுப்பார்கள், அன்றுதான் ஶ்ரவண விரதத்தையும் அநுஷ்டிக்க வேண்டும். ஒப்பிலியப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஒரு அட்டவணை போடுவார்கள். கிடைத்தால் அதையும் பார்த்துக்கொள்ளலாம்.