மடி வஸ்த்ரத்தைக் கையால் எடுத்து உலர்த்தலாமா அல்லது குச்சிகொண்டுதான் உலர்த்த வேண்டுமா? மேலும் தற்போது வந்துள்ள வயர் (போன்ற கயிறு) அல்லது ஸ்டீல் குச்சிகளில் மடி வஸ்த்ரம் உலர்த்தலாமா?

மடி வஸ்த்ரங்களைக் கொம்பால் உலர்த்துவதுதான் உசத்தி. ஏனென்றால் நாம் எவ்வளவு மடியாக இருக்கின்றோம் என்று நமக்கே தெரியாது. சிரோஸ்நானம் எல்லாம் செய்துவிட்டு பரம ஆசாரமாய் வந்திருந்தால் அது வேறு. ஆனால் அப்படியெல்லாம் அமைவது மிகவும் அரிது. அதனால் எப்பொழுதுமே மடி வஸ்த்ரங்களைக் கொம்பால் உலர்த்தி எடுத்தால் நல்லது.
வஸ்த்ரங்களை மூங்கில் கொம்பில் உலர்த்தினால் உத்தமம். அது கிடைக்கவில்லை என்றால் இரும்புக்கம்பியில் உலர்த்தினாலும் பாதகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top