அனுதாபாத் உபரமாத்*
ப்ராயசித்தோந் முகத்வத:।*
ப்ராயசித்த கரந்நாஶ்ச
பாபம் கச்சதி பாதஶ: ||
என்று ஸம்ஸ்க்ருத ஶ்லோகம் இருக்கிறது. ஒரு பாபத்தைச் செய்துவிட்டால் அந்த பாபத்தைச் செய்துவிட்டோமே என்று ஒரு அனுதாபம் நமக்கு வரவேண்டும்.
அனுதாபம் என்றால் இப்படி இந்த பாபத்தைச் செய்துவிட்டோமே என்று நம்பெயரிலேயே நமக்கு கஷ்டம்(வருத்தம்) வரவேண்டும்.
அதன்பின் அந்த பாபத்தைச் செய்யாமல் இருக்கவேண்டும்.
பிறகு ப்ராயஶ்சித்தம் பண்ண முயற்சி எடுக்கவேண்டும்.
இறுதியாக ப்ராயஶ்சித்தம் பண்ணவேண்டும்.
இப்படி நாம் மேற்கூறிய நான்கும் செய்யும்போது ஒவ்வொரு அடியிலும் கால்கால் பாகம் பாபம்போகும் என்பதாக.
இப்படி பாபத்தைச் செய்விட்டு, அந்த பாபத்திற்காக ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்தபின்னர் நிச்சயம் அதே பாபத்தைச் செய்யக்கூடாது. அதே பாபத்தை மீண்டும் மீண்டும் செய்துவிட்டு ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்துகொள்ளலாமா என்று கேள்விகேட்டால் அதற்கு என்ன பதிலளிப்பதென்று தெரியவில்லை. செய்யாமல் இருத்தல் வேண்டும்.
பாபம் வேறுவேறாக இருந்தால் மறுபடியும் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி பண்ணிக்கொள்ளலாம்.