தீபாவளியைத் தவிர மற்றைய தினங்களில் சூர்யோதயத்திற்கு முன் சிரோஸ்நானம் செய்தல் (எண்ணெய் தேய்த்து குளிக்க) கூடாது.
வேலைக்குப்போகும் ஸ்த்ரீகள், என்று விடுமுறை தினம் இருக்கின்றதோ அன்று சூர்யோதயத்திற்குப் பின் சிரோஸ்நானம் பண்ணலாம்.
வேறுவழியில்லாத சமயம் ஏதேனும் விசேஷ தினம் அல்லது வெள்ளிக்கிழமையாக இருக்கின்றது என்றால், சூர்யமண்டலத்தில் இருக்கும் எம்பெருமானை த்யானித்து “பெருமாள் திருமொழி 2.2 பாசுரத்தை”, இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பாசுரத்தைச் சொல்லி, புண்டரீகாக்ஷன் என்ற திருநாமத்தையும் சொல்லி, எம்பெருமான் சூர்யனில் இருக்கிறார் என்று நினைத்து ஸ்நானம் பண்ணலாம். ஆனால் இது இரண்டாம் பக்ஷம்தான்.