தக்ஷிணாயன புண்ய காலம் தர்ப்பணம் பற்றியதான சந்தேகம். ஸ்ரீமத் வில்லிவலம் அழகியசிங்கரின் ஆன்ஹிக க்ரந்த அனுபந்தம் பக்கம் 24லின்படி தக்ஷிணாயன புண்ணியகால தர்ப்பணம் உத்தராயணத்தில் பண்ணவேண்டும் என்று இருக்கிறது.ஆகிலும் சேவா ஸ்வாமி Diary மற்றும் ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியாவில் தர்ப்பணம் ஞாயிற்றுக்கிழமை என்று குறித்துள்ளது.வைதீக மித்ரனில் சனிக்கிழமை அன்று தர்ப்பணம் என்றுள்ளது.தயை கூர்ந்து தர்ப்பணம் என்று செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்தவும்

ஆடி மாதம் ஸங்க்ரமண தர்ப்பணம்:
வாக்கிய பஞ்சாங்கம் ப்ரகாரம் சூர்யோதயமானதற்குப் பின் 45 விநாழிகை அதாவது முக்கால் நாழிகைக்கு மாசம்பிறக்கிறது, அன்றையதினம் தான் நமக்குத் தர்ப்பணம். உத்ராயணத்தில் தர்ப்பணம் பண்ணவேண்டும், அதாவது காலையில் சூர்யோதயம் ஆரம்பித்தவுடனே தர்ப்பணத்தை ஆரம்பித்துவிட வேண்டும். ஆரம்பிப்பதுதான் முக்கியம் கடைசிபக்ஷம் அதுதான் முடியும்.
த்ருக்கணித பஞ்சாங்கம் படி முதல்நாள் இராத்ரியே அதாவது சனிக்கிழமையே ஸங்க்ரமணம் ஆரம்பித்துவிடுகிறது. ஆகையால் அதற்கு முதல்நாளே பகலில் தர்ப்பணம் பண்ணவேண்டும் என்பதினால் சனிக்கிழமை தர்ப்பணம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஸ்ரீமத் வில்லிவலம் அழகியசிங்கரின் திருவுள்ளமும் தர்ப்பணம் உத்திராயணத்தில் பண்ணவேண்டும் என்பதே.
மேலும் ஞாயிற்றுக்கிழமைதான் பண்ணவேண்டும். அன்று சூர்யோதயம் ஆனவுடனே 45விநாழிகை என்றால் 18நிமிடங்கள் (மணிக்கணக்கில்) அதற்குள் தர்ப்பணம் பண்ணவேண்டும். உ.தா சூர்யோதயம் 6 மணி என்றால் 6.18 மணிக்குள் தர்ப்பணம் பண்ணவேண்டும்.
அவரவர் ஊரில் எப்போது சூர்யோதயமோ அதிலிருந்து 18நிமிடங்களுக்குள் தர்ப்பணத்தை சங்கல்பித்துக் கொள்ளவேண்டும்.
கைரேகை தெரிந்தாலே உபஸ்தானம் பண்ணலாம்.அதனால் சந்தியாவந்தனம் உபஸ்தானத்தை முன்னரே முடித்துக்கொண்டு, தர்பையெல்லாம் முன்னரே முடித்து வைத்துக்கொண்டு, சரியாக சூர்யோதயம் ஆனவுடன் சங்கல்பித்துக்கொண்டு பண்ணோமேயானால் நிச்சயமாக குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் பண்ணமுடியும்.
ஆக எல்லா ஏற்பாடுகளையும் முன்னமே செய்து வைத்திருந்தால் அந்த நாழிகைக்குள் தர்ப்பணம் மட்டும் பண்ணமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top