பூண்டு போன்ற நிஷித்த வஸ்துவை மருந்தாக உட்கொள்ளலாமா? (இருமல், சளி போன்ற சமயம் பூண்டு பால் நல்லது என்பார்கள்)

மருந்து ரீதியாக சளி, இருமல் போவதற்கு பூண்டு எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் சளி, இருமல் போவதற்கு நிறைய மாற்று மருந்துகள் இருக்கின்றன.
திருத்துழாயைப் போல் சளி இருமலை நீக்கக்கூடிய மருந்தே கிடையாது. அதனால் அதனை க்ரஹித்தாலே நன்கு நிவாரணம் கிடைக்கும். இதைத்தவிர எத்தனையோ மருந்துகள் இருக்கின்றன. அவற்றை எடுத்துக்கொள்ளலாம். சளி இருமலுக்காக பூண்டுதான் சாப்பிடணும் என்று நிச்சயமாக கிடையாது. ஏனென்றால் இவையெல்லாம் நிஷேதிக்கப்பட்ட உணவுகள்.
எப்படி நமக்கு உடல் ஆரோக்கியம் முக்கியமோ அதே போல் மனதிலும் சத்புத்தி ஏற்படுவது மிகவும் முக்கியம். இந்தமாதிரி தாமஸமான ஆகாரங்களைச் சாப்பிட்டோமேயானால் அது நமது மனதை மிகவும் பாதிக்கும். மேலும் நமது ஶ்ரத்தையை மிகவும் குறைக்கும். அதனால் இவற்றையெல்லாம் தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top