ஶரணாகதி செய்து கொண்ட தம்பதிகள் ஶஷ்டியப்தபூர்த்தி தாராளமாகச் செய்து கொள்ளலாம். அது சூத்திரத்தில் சொல்லி இருக்கக்கூடிய விஷயம். எந்த முறையில் என்றால், வேத மந்திரங்கள் சொல்லி, கும்பம் வைத்து, செய்யவேண்டும். இதில் பெரிய நியமம் ஒன்றும் கிடையாது. ஸ்ரீ வைஷ்ணவ வாத்தியார்களைக் கேட்டால் அவர்கள் அழகாக செய்துவைப்பார்கள். அவர்களுடைய சௌகர்யத்துக்கு ஏத்த மாதிரியாக நாம் செய்யலாம். முக்கியமாக ஆசார்ய ஸம்பாவனை, அக்ஷதை ஆசீர்வாதம், திருமாங்கல்ய தாரணம், ஔபாசனம் இதெல்லாம் அதில் இருக்க வேண்டும்.
கிராமக் கோயில்களிலே இதர தேவதைகள் இருக்கின்றன. இதற்கு நிதி கொடுப்பதில் சங்கடங்கள் உண்டு. சில சமயம் வேறு வழியில்லாமல் ஊரோடு ஒத்துவாழ் என்கின்ற ரீதியிலே கொடுக்க வேண்டியிருக்கும். தவிர்க்க முடியாமல் இருந்தால் வேறு வழியில்லை. ஶாஸ்த்ரம் ஒற்றுக்கொள்ளுமா என்று பார்ப்பதைவிட, அந்த நிலைமைக்கு ஏற்ற மாதிரி செய்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஏனென்று கேட்டால், நாமே கேபிள்டிவி போன்று எத்தனையோ நியாயம் இல்லாத செலவுகள் செய்கின்றோம். அந்த ரீதியில் ஏதோ செலவோடு செலவாக இதுவும் போயிற்று என்பதாக வைத்துக் கொள்ளலாம். முடிந்தவரை தவிர்க்க பார்க்கலாம். அதேபோல் கோவில்களில் இதர தேவதைகள் இருந்தால்கூட, நம் பெருமாளை மட்டும் முடிந்தால் சேவிக்கலாம்.