காஞ்சி மற்றும் மேல்கோட்டையில் உற்சவப்பெருமாள் அருகில் இருக்கும் இரண்டு நாச்சியார்களும் ஒரே மாதிரி வடிவத்துடன் அதாவது இருவரும் வலக்கையில் தான் தாமரை ஏந்தியிருப்பார்கள். அதே மற்ற திவ்யதேசங்களில் ஸ்ரீதேவி நாச்சியார் வலக்கையிலும், பூதேவி நாச்சியார் இடக்கையிலும் வைத்திருப்பார்கள். மேற்சொன்ன இருக்ஷேத்ரத்தில் ஒரே கையில் புஷ்பம் இருப்பதற்கு ஏதேனும் குறிப்பிட்டக் காரணம் இருக்கிறதா?

நாச்சியார்கள் ஒரே கையிலே ஒரே மாதிரியாக புஷ்பம் வைத்துக் கொள்வதற்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகமங்களில் இப்படி இரண்டு விதமாகவும் சொல்லி இருக்கலாம். அதனுடைய அடிப்படையில் தாயாரை இப்படி ஏளப்பண்ணி ப்ரதிஷ்டை பண்ணியிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top