சாயம் ஸந்தியாவந்தனத்தில் தர்ப்பாசனம் என்பது கோரைப்புல் ஆசனம் என்று நினைக்கிறேன். அதைக் காட்டிலும் மணைதான் விசேஷம் என்று தோன்றுகிறது. Q32ADI22018
“மோக்ஷம் கிடைத்த பின் ஜீவாத்மாவின் (நம்) நிலை ஸ்ரீவைகுண்டத்தில் எவ்வாறு இருக்கும்?
1. நம் சரீரம் எவ்வாறு இருக்கும்? 2. நம் ஞானம் எவ்வாறு இருக்கும்? 3. அங்கே நம் பூலோக பெற்றோர் வழங்கிய நாமத்தை வைத்து அழைக்கப்படுவோமா? 4. எம்பெருமான் தாயார் மற்றும் நித்யஸூரிகள் மட்டுமல்லாமல் ஆழ்வார் ஆசார்யர்களையும் சேவிக்க இயலுமா? 5. அவர்களுடன் தமிழில் உரையாட இயலுமா? ”
மோக்ஷம் கிடைத்தபின், இங்கு இருக்கும் சரீரம் அங்கு கிடையாது. அங்கு வேண்டுமானால் புதிய சரீரம் எடுத்துக்கொள்ளலாம். அது இந்த சரீரம் போல் தோஷத்துடன் இல்லாமல் திவ்யமான சரீரமாக இருக்கும் அதாவது அப்ராக்ருதம் என்று சொல்வார்கள்.
நாம் எல்லா விஷயங்களும் தெரிந்துகொள்ளும்படியான ஞானம், அதாவது சகலமும் நமக்குத் தெரியும்படியாக இருக்கும். நம் புண்யபாபத்தினால் ஞானம் குறைந்திருக்கிறது அங்கே இவை இரண்டும் போய்விடுகின்ற படியால் ஞானம் குறையாமல் இருக்கும்.
இங்கே இருக்கின்ற பெயர் அங்கே இருக்கவேண்டிய அவசியமில்லை. அது இருக்காது.
பெருமாள், தாயார், நித்யசூரிகள், ஆழ்வார், ஆசார்யர் என எல்லாரையும் சேவிக்கலாம். எல்லாருடனும் பேசலாம், தமிழில் பேசலாம். ஸ்ரீவைகுண்ட லோகத்தில் நாம் எல்லாரும் தமிழில் ஸ்தோத்ரங்கள் சொல்லலாம் என்று ஸ்வாமி தேஶிகன் “பல்லாண்டே பல்லாண்டும் பாடுவோமே” என ஸாதித்திருக்கிறார்.