அடியேன் ஏதோ உபந்யாஸத்தில் கேட்ட விஷயம், ப்ரபத்தி செய்தபின்னும் தன் கடைசிகாலம் வரை ஒருவருக்கு தேவதாந்தரம் சம்பந்தம் இருந்ததென்றால் அவருக்கு ப்ரபத்தி சரியாகச் செய்யவில்லை என்று அர்த்தம் என்று சாதித்தார்கள். இது சரியா ஸ்வாமி? ஆசார்ய நிஷ்டை அல்லது உக்தி நிஷ்டையில் செய்யப்பட்ட ப்ரபத்தி தவறாகது அல்லவா ஸ்வாமி? அப்படியானால் அவர்காள் குறிப்பிடும் தவறு என்பது ஸ்வநிஷ்டை அல்லது ப்ரபத்தியை செய்து வைக்கும் தகுதி பெறாதவர் செய்திருந்தால் அப்படி நடக்கலாம். இதை எப்படிப் புரிந்துகொள்வது ஸ்வாமி. அடியேன்

இந்த விஷயத்தை ஸ்வாமி தேஶிகன் தான் ஸாதித்துள்ளார். அதாவது தேவதாந்தர ஸம்பந்தத்துடனே ஒருவன் எப்போதும் இருந்தானேயானால் அவனுடைய ப்ரபத்தி சரியாகச் செய்யவில்லை என்றால் செய்து வைத்தவர்கள் மேல் தவறில்லை.யார் செய்துகொண்டார்களோ அவருடைய தேவதாந்தர ஸம்பந்தத்தால் சரியாக ஆகவில்லை என்று அர்த்தமாகுகிறது.
ஸ்வநிஷ்டா, ஆசார்யநிஷ்டா என்ற கேள்வியின் அடுத்தபகுதிக்கான விடையை பின்னாளில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top