சந்திராஷ்டமம் என்பது நம்முடைய ராசியில் இருந்து 8ஆவது ராசி, அது வரக்கூடிய நாட்கள் சந்திராஷ்டம நாள்கள் என்பதாக கணக்கு. இதற்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. நம்முடைய சந்த்ராஷ்ட தினத்தில் நமது காரியங்கள் ஒரளவு சரியாக நடக்காது என்று புரிந்துகொள்ள வேண்டும். மற்றபடி வேறு ஒன்றும் கிடையாது.
நம்முடைய நித்யபடி அனுஷ்டானங்கள் எல்லாம் பண்ணலாம். சந்த்ராஷ்டம தினத்தில் முகூர்த்தங்கள் வைக்க மாட்டார்கள். உதாஹரணமாக யாருக்கு விவாஹமோ அவருடைய சந்த்ராஷ்டம தினத்தில் விவாஹம் முதலானதெல்லாம் வைக்க மாட்டார்கள். இது ஜோதிஷ ஶாஸ்த்ரதில் இருக்கிறது. மற்றபடி நித்யப்படி அனுஷ்டானத்திற்கோ, உற்சவாதிகளுக்கோ இது பாதகமாக ஆகாது.