ப்ரபந்நர்கள் பகவத் ப்ரீத்யர்த்தன் என்று சங்கல்பம் சொல்லவேண்டும். அதேசமயம் சில சங்கல்பத்தில் கோத்ரம், நக்ஷத்ரமெல்லாம் சொல்லவேண்டி வரும். ஶாஸ்த்ரத்திலே சில கர்மானுஷ்டங்களில் கோத்ரம் நக்ஷத்ரமெல்லாம் சொல்லி பண்ணவேண்டி வரும்.
அந்த ரிதீரியல் கோயிலில் திருமஞ்சனக் கைங்கர்யம் பண்ணும்போது கோத்ரம்,நக்ஷத்ரம்,பெயர் எல்லாம் சொல்லலாம் சொல்லாமலும் இருக்கலாம், பொதுவாக பகவத் ப்ரீத்யர்த்தம் என்று சொல்லலாம்.
அகத்தில் ஸுதர்ஶந ஹோமம் போன்றவைக்கு கோத்ரம், நக்ஷத்ரமெல்லாம் சொல்லுவது வழக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது, ஏனென்றால் க்ஷேமார்த்தம், ஆயுள், ஆரோக்ய, ஐஶ்வர்யத்திற்காக பண்ணுவதால். அங்கே பகவத் ப்ரீத்யர்த்தம் என்று சொல்லி, பெயர் கோத்ரம் போன்றவையெல்லாம் சொல்லலாம் எனத் தோன்றுகிறது.