சென்ற சுதர்சனத்தில் அடியேனின் கேள்விக்கு ஸ்வாமி ஸாதித்தது ஒரு ஸ்ரீவைஷ்ணவர், ஸ்ரீவைஷ்ணவரல்லாதவர் கொடுத்த ப்ரசாதம் (பெருமாள் ப்ரசாதமாக இருந்தாலும்) உட்கொண்டால் அது தோஷம்தான் என்று தெளிவுபடுத்தினீர்கள். அடியேன் அன்று தெரியாமல் (ஒப்பிலியப்பனின் ப்ரசாதம்(சர்க்கரைப்பொங்கல்) மற்றும் திருப்பதி லட்டு ப்ரசாதமும்) உட்கொண்டேன் இதனால் ஏதேனும் பாபம் ஏற்பட்டிருக்குமா? அப்படியானால் ஏதேனும் ப்ராயச்சித்தம் செய்ய வேண்டுமா?

ஆகாரத்தில் தோஷம் என்பது இரண்டுவிதம். ஒன்று பெருமாள் ப்ரசாதம் அல்லாத ஒன்றை நாம் சாப்பிடுதல். மற்றொரு தோஷம், வேறு ஒருத்தர் கொடுப்பதைச் சாப்பிடுதல் அது அனாச்சாரத்தில் சேரும்.
இதில், அவர் பெருமாள் ப்ரசாதத்தைச் சாப்பிட்டுள்ளார். அதனால் முதல் தோஷம் இல்லை. நல்ல ஆச்சாரத்துடன் இருக்கின்றவராக இருந்தால், இதனால் ஆச்சாரக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்குச் சில பரிகாரங்கள் உள்ளது, பஞ்சகவ்யம் போன்றவை உட்கொள்ளுதல் என. இல்லை அவர்கள் பொதுவாகவே வெளியில் சாப்பிடுபவர்களாக இருந்தால், இதனால் பெரிய தோஷமில்லை என்று விடவேண்டியதுதான்.
குறிப்பு:
பொதுவாக என்ன சொல்லியிருக்கிறதோ அந்த விஷயத்தை மேலோட்டமாக பார்த்து புரிந்துகொள்ள வேண்டும். இது இப்படியானால், அப்படியானால் என்ன என்று அலசி ஆராயும்படியான கேள்விகளைத் தவிர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top