அடியேன் நவராத்ரி என்பது துர்கா தேவியை 9 நாளும் பூஜிக்கும் வழக்கம் என்றும் சிவன் உரைத்ததோ அல்லது ஶாகேத்ய சம்ப்ரதாயத்தில் இருக்கிறது என்று கேள்விப்பட்டுள்ளேன். நம் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இருக்கும் பாசுரங்களிலோ, இதிஹாச புராணங்களிலோ நவராத்ரியின் குறிப்பு எங்கேயும் உள்ளதா என அறிய ஆவலாக இருக்கிறது? நம் பூர்வாசார்யர்கள் கொண்டாடியிருக்கின்றனரா? என்று தெளிவிக்கவும்.

நவராத்ரி வழிபாடு பற்றி ஸ்ரீ லக்ஷ்மீதந்திரத்தில் சொல்லப்பட்டிருகிறது. மேலும் இது பூர்த்தியாக ஸ்ரீவைஷ்ணவ வழிபாடு என்று நிர்தாரணம் பண்ணி நம் GSPKவில் நவராத்ரியின் சிறப்பு என்ற ஒரு உபந்யாஸத்தின் விளக்கப்பட்டிருக்கிறது அதை கேட்கவும்.

நவராத்ரி என்பது லக்ஷ்மீதேவி விஷயமான வழிபாடுதான். லக்ஷ்மீதேவியின் எந்தெந்த ஸ்தோத்ரங்கள், ப்ரபந்தங்கள், ரூபங்கள் எந்தெந்த நாள் என்பதை விஸ்தாரமாக ஒரு pdf தொகுப்பாய் கீழேயுள்ள பக்கத்தில் காணலாம்.
https://www.sampradayamanjari.org/sudarsanam-guide-to-upcoming-events/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top