எப்படி ஒரு அபூர்வமான ரத்தினத்தை நாம் காண்ட இடங்களில் வைக்காது பெட்டிக்குள்ளே பத்திரமாய் பூட்டி வைக்கின்றோமோ, அதுபோலே எம்பெருமானின் தத்துவ ஞானமானது மிகவும் அபூர்வமான விஷயம். ஆகையால் அதை வேதங்கள் மறைத்தே சொல்லுகின்றன. ஏனெனில் அவ்விஷயங்களை ஒரு குருமுகமாய் மட்டுமே அறியவேண்டும் என்பதற்காகவும் மறைத்துக் கூறப்பட்டுள்ளது.
எம்பெருமான் லீலையாக பல தெய்வங்களைப் படைக்கிறான். இவையெல்லாம் எம்பெருமானின் “லோகவத்து லீலா கைவல்யம்” என்பதாக ப்ரம்ம சூத்ரம் சொல்லுகிறது. இந்த லோகத்தை லீலையாக பகவான் படைத்திருக்கிறான், அவனுடைய லீலைகளில் இதெல்லாம் காரணம். மேலும் அந்தந்த ஜீவராசிகளின் கர்மவினையை அனுசரித்து லோகத்தை நடத்துகிறான், அக்காரணத்திற்காகவும் பகவான் இதர தேவதைகளைப் படைத்திருக்கிறான்.
மனிதர்களில் பலருக்கு பல தேவர்களைப் பிடித்திருக்கும். அவர்களும் பலன் பெறட்டுமே என்ற நல்ல எண்ணமும் காரணமாகும்.