பொதுவாக முடிந்தவரை சந்தியாதிகர்மாக்களைச் சுத்தமாகச் செய்வது உசிதம்.
ஸ்நானம் செய்யமுடிந்தால், ஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் செய்யலாம்.
அப்படி முடியாதவர்கள், தலைக்குத் தீர்த்தமாடாமல் கண்ட ஸ்நானம் (அதாவது, தலைக்குத் தீர்த்தமாடாமல், கழுத்துவரை ஸ்நானம் செய்து) முகத்தை அலம்பிக்கொண்டு பண்ணலாம், அதுவும் முடியாதவர்கள் முகத்தை மட்டும் அலம்பிக்கொண்டு நெற்றியிட்டுக்கொண்டு மந்திரஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் செய்யலாம்.
இது ஶக்த,அஶக்த விஷயங்களாகும்.