வேலைக்குச் செல்வோர்கள் பணி முடிந்து திரும்பிய பின் சாயம் சந்தியாவனம் செய்யும் முன் தலைக்குத் தீர்த்தமாட வேண்டுமா அல்லது சந்தியாவனத்தில் வரும் ப்ரோக்ஷன மந்திரங்களே சுத்தியைத் தருமா? அஷ்டாக்ஷர ஜபம் அதில் செய்யவேண்டியிருப்பதால் இந்தச் சந்தேகம் எழுந்தது.

பொதுவாக முடிந்தவரை சந்தியாதிகர்மாக்களைச் சுத்தமாகச் செய்வது உசிதம்.
ஸ்நானம் செய்யமுடிந்தால், ஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் செய்யலாம்.
அப்படி முடியாதவர்கள், தலைக்குத் தீர்த்தமாடாமல் கண்ட ஸ்நானம் (அதாவது, தலைக்குத் தீர்த்தமாடாமல், கழுத்துவரை ஸ்நானம் செய்து) முகத்தை அலம்பிக்கொண்டு பண்ணலாம், அதுவும் முடியாதவர்கள் முகத்தை மட்டும் அலம்பிக்கொண்டு நெற்றியிட்டுக்கொண்டு மந்திரஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் செய்யலாம்.
இது ஶக்த,அஶக்த விஷயங்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top