“GSPKவில் வேத மஹிமை உபன்யாசத் தொடரில் நாவல்பாக்கம் ஸ்ரீ உ.வே. கண்ணன் ஸ்வாமி சாதித்த விஷயங்களில் அடியேனுக்கு சில சந்தேகங்கள். 1. ஸ்ரீவைஷ்ணவர்கள் வேறு ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த வேதவித்வானிடமோ அல்லது பாடசாலையிலோ வேதம் கற்றுக்கொள்ளலாமா? 2. ஸ்ரீவைஷ்ணவர்கள் வேறு ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த வேதவித்வான்களை, கீழேவிழுந்து சேவிக்க வேண்டுமா? இங்கே வேதவித்வான்கள் என்று எண்ணி கீழேவிழுந்து சேவிப்பது சரியான அனுஷ்டானமா அல்லது ஸ்ரீவைஷ்ணவர்கள் அல்லர் என்று எண்ணி அஞ்சலி நமஸ்காரத்தோடு நிறுத்தி விடுவது சரியா? நம் ஆழ்வார் ஆசார்யர்கள் இதில் எந்த அனுஷ்டானத்தை ஆதரிக்கின்றனர்? “

காலத்தை அனுசரித்து பார்த்தால், முடிந்தவரை நம் ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் அத்யயனம் செய்வது உத்தமமான கல்பம். முடியாவிட்டால், இக்காலத்தில் அத்யயனம் செய்தவர்களும் குறைவு அதை செய்விப்பவர்களும் (கற்றுக்கொடுப்பவர்கள்) குறைவு, ஆகையால் அத்யயனம் செய்வது முக்கியமானபடியினாலே அவர்களிடத்தில் அத்யயனம் செய்தால் தவறில்லை என்று தோன்றுகிறது.
வேதாத்யயனம் செய்த ப்ராஹ்மணரிடத்தில் எல்லா தேவதைகளும் குடியிருப்பதாக வேதமே சொல்லிகிறது. க்ருஷ்ணனும், அக்னிஹோத்ரியை நான் நமஸ்காரம் செய்கிறேன் என்று சொல்லுகிறான். ஆகையால், இதர ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வேதாத்யயனம் செய்திருந்தால் அவர்களைச் சேவிப்பதில் தவறில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top