காலத்தை அனுசரித்து பார்த்தால், முடிந்தவரை நம் ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் அத்யயனம் செய்வது உத்தமமான கல்பம். முடியாவிட்டால், இக்காலத்தில் அத்யயனம் செய்தவர்களும் குறைவு அதை செய்விப்பவர்களும் (கற்றுக்கொடுப்பவர்கள்) குறைவு, ஆகையால் அத்யயனம் செய்வது முக்கியமானபடியினாலே அவர்களிடத்தில் அத்யயனம் செய்தால் தவறில்லை என்று தோன்றுகிறது.
வேதாத்யயனம் செய்த ப்ராஹ்மணரிடத்தில் எல்லா தேவதைகளும் குடியிருப்பதாக வேதமே சொல்லிகிறது. க்ருஷ்ணனும், அக்னிஹோத்ரியை நான் நமஸ்காரம் செய்கிறேன் என்று சொல்லுகிறான். ஆகையால், இதர ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வேதாத்யயனம் செய்திருந்தால் அவர்களைச் சேவிப்பதில் தவறில்லை.