உபநிஷத் பாராயணம் இராத்திரியில் செய்வதில்லை. உபநிஷத்தின் ஸாரமான திருவாய்மொழியை இராத்திரியில் சொல்லலாமா என்றால் பெரியவர்களின் ஆசாரத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதாவது இரவில் தயிர் சாப்பிடக்கூடாது என்றிருக்கிறது, ஆனால் தயிரின் ஸாரமான நெய்யைச் சாப்பிடுகிறோம் அல்லவா! அதுபோலேதான் இதுவும்.

