கோயிலில் கொடுக்கும் பவித்ர மாலைகளை அவற்றைத் தரித்துக்கொண்டு அனுஷ்டானம், திருவாராதனம், ஜபம் போன்றவற்றைச் செய்யலாம். சுத்தமாக இருக்கும் சமயங்களில் நாம் அதைத் தரித்துக்கொள்ளலாம்.
அந்தப் பவித்ர மாலைகள் பழையதாக ஆகிவிட்டால், அதைக் களையும்போது அசுத்தமான இடத்தில் சேர்க்காமல் சுத்தாமன இடத்தில் சேர்க்கலாம். அதாவது கால் படாத இடங்களில், அல்லது நதியில் சேர்த்து விடலாம்.