சென்ற சுதர்சன இதழில் அகத்திலிருப்பவர்களுக்குப் பெருமாள் தீர்த்தம் மூன்று முறை கொடுக்கலாம் என்று பதில் அளித்திருந்தீர்கள். அகத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் மூன்று முறையா அல்லது ஸமாஶ்ரயணம் ஆனவர்களுக்குத்தான் மூன்று முறையா என்பதை தெளியப்படுத்தவும்.

பெருமாள் தீர்த்தம் மூன்று முறை கொடுக்கலாம் என்பதில் சில அகத்தில் ஸமாஶ்ரயணம் ஆனவர்களுக்கு மட்டும் மூன்று முறை, ஆகாதவர்களுக்கு ஒரு தடவை என்பதாக ஒரு வழக்கம் இருக்கிறது.
அவரவர்கள் அகத்து வழக்கப்படி பின்பற்றவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top