சந்தியாவந்தனம் அதனுடைய காலத்திலே செய்யவேண்டும். அப்படிச் செய்யத் தவறிவிட்டால், அதாவது ஒரு ஒன்றரை மணிக்காலத்திற்குள் செய்யவேண்டும். சமயம் ஆக ஆக அதற்கு ப்ராணாயமம் முதலிய ப்ராயஶ்சித்தங்கள் எல்லாம் உண்டு.
இப்போதெல்லாம் இரவு 8, 9 மணிக்கெல்லாம் சந்தியாவந்தனம் செய்கிறார்கள். அதில் ஒன்றும் பெரிய வித்யாசம் இல்லை.
ஆனால் சில சமயம் ப்ராயணத்தின் போது குறிப்ப்பாக தூரமான ப்ரயாணம் செல்லும்போது, அன்றைய சந்தியாவந்தனம் மறுநாள் பிம்மாலையோ அல்லது காலையிலோ பண்ணும்படி ஆகிவிடுகிறது. அந்தச் சமயம் அதிகப்படி ப்ராணயாமம் செய்வது ப்ராயஶ்சித்தமாகுகிறது . அதாவது 3 தடவை அதிகப்படி ப்ராணயாமம் முதலியவை பண்ணவேண்டும்.