அடியேன் USAல் இருப்பதால் ஸ்ரீரங்கம், காஞ்சி போன்ற திவ்யதேசங்களுக்கு போகமுடியாமல் இருக்கின்றோம். இங்கே இருக்கும் எம்பெருமானின் திவ்யமங்கள ரூபத்தில் ஈடுபட்டால், எங்கே திவ்யதேச எம்பெருமானைப் போய்ச் சேவிக்கும் பாக்கியம் கிட்டாதோ என்ற ஒரு ஐயம் எழுகிறது. இப்படி எம்பெருமானின் அர்ச்சாமூர்த்தியில் பேதம் பார்ப்பது சரியா ஸ்வாமி? ஏதேனும் தேஷமாகுமா?

எம்பெருமான் ஆங்காங்கே அர்ச்சாமூர்த்தியாய் சேவை சாதிப்பது எல்லாராலும் திவ்ய தேசங்கள் போய்ச் சேவிக்க முடியாது என்ற காரணத்தினால்தான். அப்படியிருக்க அவனே க்ருபையுடன் எங்கு இறங்கிவந்திருகிறானோ அவ்விடத்தில் ஈடுபடுவதென்பது நமக்கு ஏற்பட்ட பாக்கியமாகும்.
எங்கே இங்கிருக்கும் எம்பெருமானிடத்தில் ஈடுபாடு ஏற்பட்டால் திவ்யதேச எம்பெருமானைச் சேவிக்கும் ஆசை மாறிவிடுமோ என்று நினைக்கவேண்டிய அவசியமில்லை. திவ்ய தேசம் சேவிக்கும் ஆசையும் அவன் ஏற்படுத்தி வைப்பான், நமக்கென்று அவன் வந்திருக்கும் இடத்தில் அவன் மேல் ஈடுபாடு கொள்ளும்படி செய்ததும் அவனுடைய பரமானுக்ரஹம்தான்.
எல்லா அர்ச்சாமூர்த்தி எம்பெருமானித்திடலும் ஈடுபாடு கொள்வதென்பது ஸ்ரீவைஷ்ணவர்களின் ஸ்வரூபம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top