க்ரஹண காலத்தில் சாளக்கிராம மூர்த்திக்குத் (நித்யபடிச் செய்யும்) திருவாராதனை பண்ணலாம்.
ஆமாம் க்ரஹண கால திருவாராதனை என்று விசேஷ திருவாராதனை இருக்கிறது. எப்படி நித்யபடி திருவாராதனை சமயத்தில் “இஜ்யாக்னேன” என சங்கல்பிக்கிறோமோ அதேபோல் க்ரஹணகால திருவாராதனை சங்கல்பத்தில், “ஸோமோபராக புண்ய கால அல்லது ஸூர்யோபராக புண்ய கால ஆராதனா” என்று சொல்லிக்கொள்ள வேண்டும். மற்றபடி வேறொரு வித்யாசமும் இல்லை.
தளிகை பண்ணாமுடியாத காரணத்தினால், க்ரஹணகால திருவாராதனை போது பால், பழம், கற்கண்டு மட்டும்தான் அம்சைபண்ணமுடியும். குறிப்பாக பழம், கற்கண்டு இவை இரண்டும் தான் முக்கியமாக அம்சை பண்ணுவார்கள்.