நித்யபடி திருவாராதனை சமயம் பலா, அன்னாசி போன்ற பழங்கள் முழுவதாக இல்லாமல் உரித்த (சிறு துண்டுகளாக அரிந்து) பழங்களை வாங்கி ஸமர்ப்பிக்கலாமா? அதே போல் முழுப்பாக்குதான் வெற்றிலையோடு ஸமர்ப்பிக்க வேண்டுமா? அடியேன் உடைத்த பாக்குதான் வாங்கிக்கொண்டு இருக்கிறேன்.

நித்யபடி திருவாராதனைச் சமயம் பலா, அன்னாசி போன்ற பழங்களை பக்குவப்படுத்தி எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பது என்பது சிறந்த உபசாரமாகும். பழங்களையெல்லாம் நாம் முழுதுமாக (முழுப்பழமாக) வாங்கி, நம் அகத்திலே அரிந்துதான் பெருமாளுக்கு ஸமர்ப்பிக்க வேண்டும். கடையில் பாதியாக அரிந்து வைத்துள்ள பழங்களை நாம் வாங்கி பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கும் வழக்கம் கிடையாது.
முழுப்பாக்கு உபயோகிப்பதுதான் வழக்கத்தில் இருக்கிறது. கொட்டைப்பாக்கு என்று ஒன்று கடைகளில் கிடைக்கும், அதை வாங்கி ஸமர்ப்பிப்பார்கள். அதுவே தூள் பாக்கு என்று ஒன்று கிடைக்கிறது அதை ஸமர்ப்பிக்கக்கூடாது.
முழுப்பாக்கு என கேரளா போன்ற இடங்களில் கிடைக்கும், நம்மூரில் அது கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஆகையால் அது ப்ரஸக்தியிருக்காது எனத் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top