ஆவணி அவிட்டம் இந்த வருடம் ஆடி மாதம் வந்தது, அன்று பண்ண முடியாதவர்கள், ஆவணி மாதம் பௌர்ணமி அன்று அதைப் பண்ணவேண்டும். மேலும் அமாவாஸை தர்ப்பணம் ருக்மமாக பண்ணத்தான் வேண்டும்.
மஹாளய தர்ப்பணம் மாதா பிதாக்களின் மரண வருஷத்தில்கூட கட்டாயம் செய்ய வேண்டும் என்று ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது.
மஹாளயத்தை சிலர் தர்ப்பணமாகச் செய்யாமல் அன்ன ஶ்ராத்தமாக செய்வார்கள், அவர்களால் இதைப் பண்ண முடியாது.
ஆனால் நம் ஸம்ப்ரதாயத்தில் தர்ப்பணமாகத்தான் இதை செய்துகொண்டிருக்கிறோம். ஆகையால் மஹாளய தர்ப்பணம் அவசியம் செய்ய வேண்டியது.