35.a. என் மாமனார் ஆகஸ்ட் 5 அன்று காலமானார்.எனது புத்திரனின் உபநயனம் ஜூலை மாதம் 6 அன்று நடந்தது.அவனுக்கு எப்பொழுது ஆவணி அவிட்டம் நடத்த வேண்டும்.கணவருக்கு அமாவாசை தர்ப்பணம் உண்டா ஒரு வருடத்திற்கு. b. எனது மாமனார் ஆகஸ்ட் 5 அன்று காலமானார்.கணவருக்கு மஹாளயபக்ஷம் உண்டா

ஆவணி அவிட்டம் இந்த வருடம் ஆடி மாதம் வந்தது, அன்று பண்ண முடியாதவர்கள், ஆவணி மாதம் பௌர்ணமி அன்று அதைப் பண்ணவேண்டும். மேலும் அமாவாஸை தர்ப்பணம் ருக்மமாக பண்ணத்தான் வேண்டும்.
மஹாளய தர்ப்பணம் மாதா பிதாக்களின் மரண வருஷத்தில்கூட கட்டாயம் செய்ய வேண்டும் என்று ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது.
மஹாளயத்தை சிலர் தர்ப்பணமாகச் செய்யாமல் அன்ன ஶ்ராத்தமாக செய்வார்கள், அவர்களால் இதைப் பண்ண முடியாது.
ஆனால் நம் ஸம்ப்ரதாயத்தில் தர்ப்பணமாகத்தான் இதை செய்துகொண்டிருக்கிறோம். ஆகையால் மஹாளய தர்ப்பணம் அவசியம் செய்ய வேண்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top