புக்ககத்தில் இருக்கும் வயது முதிந்தவர்கள், மற்றும் மாமனார், மாமியாரை பரந்யாஸம் ஆகவில்லை என்றாலும் சேவிக்கலாம். தேவதாந்தர சம்பந்தம் இருப்பது வருத்தமான விஷயம், அது சீக்கிரம் நீங்க எம்பெருமானை ஶ்ரத்தையுடன் ப்ரார்த்திக்கலாம். மாமனார், மாமியாரின் ஸ்தானத்திற்கு வைத்து சேவிக்க வேண்டியது அவசியம் ஆகையால் சேவிக்கனும்.
நவராத்திரி கொலுவிற்கு இதர ஜாதியினர் வந்தால் வெற்றிலை பாக்கு கொடுக்கலாம். அய்யர் அகத்துக்கும் போய் தாம்பூலம் எடுத்துக்கொள்ளலாம்.
இதர ஜாதியினர் வீட்டின் கல்யாணம், சீமந்தம் போன்ற விசேஷங்களுக்குப் போகலாம். வேறு மாதிரி காரியங்களுக்குப் போவதைத் தவிர்க்கலாம்.
ப்ரபத்தி ஆனவர்கள் அகத்து வழக்கப்படி சுமங்கலி ப்ரார்த்தனையிருந்தால் பண்ணலாம். லக்ஷ்மீதேவியை மனதில் நினைத்துக்கொண்டு பண்ணலாம்.
இதர ஜாதியினர் ஸமாஶ்ரயணம் ஆகியிருந்தால் அவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள் என்பதை மனதில் கொண்டு அபசாரம் படாமல், மரியாதையுடன் பழக வேண்டும். சமபந்தியில் அமர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அந்த ஜாதிக்குரிய வரம்புகளை எங்கு மீறக்கூடாதோ அங்கே மீறக்கூடாது, அதே போல் நம் க்ருஹங்களில் சில இடங்களை அவர்கள் பார்க்கக்கூடாது என்று இருக்கு, அவ்விடத்தைப் பார்க்காமல் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அவர்களை எவ்விதத்திலும் குறைத்து நினைக்காமல், மிகவும் மரியாதையுடன் பழக வேண்டும். அவர்களிடம் அபச்சாரம் படாமல் இருக்கவேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.