கோத்ரம் என்றால் அந்தப் பரம்பரையில் வந்தவர்கள். அதாவது புத்திரன், பௌத்திரன், ப்ரபௌத்திரன் என்றெல்லாம் சொல்கின்றோம். அப்படி சொல்லும் பொழுது ஒரு குறிப்பிட்ட சந்ததிக்குமேல் மேற்கொண்டு சொல்ல முடியாது. அப்பொழுது கோத்ரம் என்று பெயர் வைத்துவிடுகின்றனர் . அந்த கோத்ரத்தில் வந்தவரென்றால் அந்தப் பரம்பரையில் வந்தவர் என்று அர்த்தம். இது வ்யாக்கியான சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பௌத்திரன் ஆகியாயிற்று என்றால், பின் கோத்ரத்தைச் சொல்லலாம். புத்திரன், பௌத்திரன், நத்தா என்று சொல்வார்கள், தொடர்ந்து கோத்திரம் என்று சொல்லலாம். அந்தந்த மஹரிஷியுனைடய கோத்திரத்தை நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அந்த வம்சத்தில் வந்தவர்கள் என்று அர்த்தம்.
எல்லா வர்ணாஶ்ரமகாரர்களுக்கும் கோத்ரம் இருக்கும். அவரவர் கோத்ரம் மூலம் வர்ணாஶ்ரமத்தை அறிய முடியாது. வர்ணம் என்றால் ஜாதி. ஆஶ்ரமம் என்றால் அவர் க்ருஹத்ராஶ்ரமத்தில் அல்லது வேறு என்று சிலவற்றைக் கண்டுபிடிக்கலாம் . ப்ராஹ்மண ஜாதிக்கு மட்டும் என்று சில கோத்ரங்கள் உண்டு. அதை வைத்துகொண்டு சிலவற்றை கண்டுபிடிக்க முடியும்.
பொதுவாக கோத்ரம் இருக்கின்றவர்கள், இல்லாதவர்கள் என்று சட்டென்று சொல்ல முடியாது. ஏனென்றால் நிறைய பேர் கோத்திரம் வைத்து கொண்டிருக்கின்றனர்.
ஆஶ்ரமம் என்பது அவரவர் இருக்கக்கூடிய நிலையைப் பொருத்தது. ப்ரஹ்மச்சாரி, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தன், சந்யாசி என்று இருக்கின்றது.