சந்தியாவந்தனம் செய்யாமல் இருப்பவர்களுக்கு ப்ரபத்தி பலன் கிடைக்குமா என்றால் கிடைக்கும், இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. ஸமாஶ்ரயணம், ஶரணாகதி போன்றவை பண்ணாலும் சரி பண்ணிக்காவிட்டாலும் சரி சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்பது பொது விதி.
ஶரணாகதி பண்ணாலும் இல்லாவிட்டாலும் சந்தியாவந்தனம் பண்ணவேண்டும், இல்லாவிட்டால் பாபம் உண்டாகும் மேலும் வேறு கர்மாநுஷ்டானங்கள் பண்ணும் தகுதியெல்லாம் கிடையாது என்றாகிவிடும்.
குறிப்புகள்:
உ.தா: ஒருவர் நான் தான் ஶரணாகதி பண்ணிவிட்டேனே அப்போ நான் பொய் சொன்னால் என்ன? பொய் சொன்னால் பாபமாகுமா? என்று கேட்டால், பொய் சொல்லக்கூடாது என்பது பொது விதி, சொன்னால் பாபமுண்டு என்பதில் சந்தேகமே கிடையாது.
அதேபோல் தான் சந்தியாவந்தனம் என்பது பொது விதி அது எந்த விதத்திலும் ஶரணாகதியைப் பாதிக்காது, சாதிக்கவும் சாதிக்காது. இரண்டும் வெவ்வேறு தடம்; ஒன்றையொன்று பாதிக்காது.