ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் காலக்ஷேபம் பண்ணினால் நல்லது, எம்பெருமானை அனுபவிக்க முடியும். பண்ணமுடியாவிட்டால் என்பது தடையோ பாபமோ ஆகாது. கிட்டியவரையில் விசேஷம் என்பதுதான், இல்லாவிடில் அந்த வாய்ப்பை நாம் இழக்கிறோம் அவ்வளவே.
உ.தா: ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் காலக்ஷேபம் என்பது ஒருவர் 50 லக்ஷம் ரூபாய் நமக்குத் தருவது போலே, அவர் கொடுக்கும் ரூபாயை நான் வாங்கிக் கொள்ள வேண்டுமா? இல்லாவிட்டால் தப்பா? என்றால் தப்பேயில்லை ஆனால் 50 லக்ஷம் ரூபாய் நமக்குதான் நஷ்டமாகும்.
எப்படி அந்த ரூபாயை நாம் வேண்டும் என்று சொல்வதோ, வேண்டாம் என்று சொல்வதோ, நம் விருப்பமாகுமோ, அதே போல்தான் காலஷேபமும் அதைப் பண்ணாவிடில் நஷ்டமே தவிர பாபமில்லை.
மற்றபடி நித்யபடி கர்மாக்கள் செய்வது, ஸ்தோத்ரங்கள் சேவிப்பதெல்லாம் மிகவும் நல்ல விஷயம், பாராட்டப்படவேண்டிய விஷயங்கள்.