நான் 45 ஆவது பட்ட ஸ்ரீமத் அழகிய சிங்கரிடம் ஸமாஶ்ரயணமும் சரணாகதியும் செய்துகொண்டேன். ஒரு தகுதியான குருவின் கீழ் ரஹஸ்ய த்ரயம் காலக்ஷேபம் செய்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிட்டவில்லை. அது ஒரு தடையா? எனது பேரனைப் பார்த்துக்கொள்வதற்காக நான் அடிக்கடி அமெரிக்காவிற்குச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. 12 மணிநேரம் கால வித்தியாசம் இருப்பதால் என்னால் இணையவழி நிகழ்நிலை காலக்ஷேபத்தில் கலந்துகொள்ள முடிவதில்லை. நான் நித்ய மற்றும் நைமித்திக கர்மாக்களைத் தவறாமல் செய்து வருகிறேன். என்னால் முடிந்தவரை ஸ்லோகங்களை சொல்கின்றேன். காலக்ஷேபம் செய்வது கட்டாயமா? தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன். தன்யாஸ்மி

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் காலக்ஷேபம் பண்ணினால் நல்லது, எம்பெருமானை அனுபவிக்க முடியும். பண்ணமுடியாவிட்டால் என்பது தடையோ பாபமோ ஆகாது. கிட்டியவரையில் விசேஷம் என்பதுதான், இல்லாவிடில் அந்த வாய்ப்பை நாம் இழக்கிறோம் அவ்வளவே.
உ.தா: ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் காலக்ஷேபம் என்பது ஒருவர் 50 லக்ஷம் ரூபாய் நமக்குத் தருவது போலே, அவர் கொடுக்கும் ரூபாயை நான் வாங்கிக் கொள்ள வேண்டுமா? இல்லாவிட்டால் தப்பா? என்றால் தப்பேயில்லை ஆனால் 50 லக்ஷம் ரூபாய் நமக்குதான் நஷ்டமாகும்.
எப்படி அந்த ரூபாயை நாம் வேண்டும் என்று சொல்வதோ, வேண்டாம் என்று சொல்வதோ, நம் விருப்பமாகுமோ, அதே போல்தான் காலஷேபமும் அதைப் பண்ணாவிடில் நஷ்டமே தவிர பாபமில்லை.
மற்றபடி நித்யபடி கர்மாக்கள் செய்வது, ஸ்தோத்ரங்கள் சேவிப்பதெல்லாம் மிகவும் நல்ல விஷயம், பாராட்டப்படவேண்டிய விஷயங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top