அடியேனுடைய தகப்பனார், தாயார் இருவருமே ஒரே வருடத்தில் அடுத்தடுத்து பரமபதித்துவிட்டனர். அண்ணாவுக்கு இருதய நோய் வந்து ஆபரேஷன் செய்யது கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது . இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான அண்ணாவின் போக்கு மிகவும் கவலையாக உள்ளது. ரொம்பவும் கோபப்படுவது, கண்டபடி பேசுவது என்று நடந்து கொள்கிறார். இதனால் மன்னி மிகவும் வேதனை படுகிறார். அண்ணாவின் இந்தப் போக்கு மாறுவதற்கு பரிகாரம் ஏதேனும் உண்டா? என்ன ஸ்லோகம் சொல்லவேண்டும். இதற்கு ஒருவழி சொல்லும்படி ப்ரார்த்திக்கிறேன் ஸ்வாமி. அடியேன் தன்யாஸ்மி.

அவரின் போக்கு மாறுவதற்கு காமாஸிகாஷ்டகம் சொல்லலாம் எனத் தோன்றுகிறது. சகலவிதமான கஷ்டங்களும் நிவ்ருத்தி ஆகி எம்பெருமானையே ஆஶ்ரயித்து இருப்பதாக அந்த ஸ்தோத்ரத்தில் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top