தர்பணம் செய்த பிறகு மீதம் இருக்கும் எள்ளை என்ன செய்ய வேண்டும், நாம் எங்கு இருந்து எடுத்தோமோ அதே பெட்டியில் மீண்டும் சேர்த்துவிட்டு அடுத்த முறைக்கு உபயோகிக்கலாமா? சிலர் அது சேஷம் அப்படிச் செய்யக்கூடாது அதை புக்னத்தில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள்.

தர்ப்பணம் பண்ணி மீதமிருக்கும் எள்ளை வைத்துக்கொள்ளக் கூடாது.
தர்பணம் செய்த பிறகு மீதம் இருக்கும் எள்ளை என்ன செய்ய வேண்டுமென்று தர்ப்பண ப்ரயோகத்திலேயே இருக்கு, மீதமிருக்கும் எள்ளு, தர்பம் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து அதற்கு ஒரு ஶ்லோகம் இருக்கிறது அந்த ஶ்லோகத்தைச் சொல்லி மொத்ததையும் ஸமர்பித்துவிடவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top