ஸ்திரீகள் சாளக்கிராமத்தைத் தொடக்கூடாது என்கிறார்கள். அடியேனின் தாயார் கூறியதாவது, என் பாட்டி பெருமாள் ஏளியிருக்கும் பெட்டியைச் சுத்தம் செய்யும் சமயம் பெருமாளைத் தொடுவார் என்றார். பாட்டி அப்படிச் செய்ததால் பெருமாளின் சாநித்யம் குறைந்து போய்விடுமா? என்பது அடியேனின் சந்தேகம். மேலும் அடியேன் தொடர்ந்து அந்தப் பெருமாளுக்கு திருவாராதனை செய்யலாமா?

ஸ்த்ரீகள் சாளக்கிராமத்தைத் தொடக்கூடாது. கேள்வி கேட்டிருப்பவருடைய பாட்டி சாளக்கிராமத்தைத் தொடநேர்ந்ததாகச் சொல்கிறார், அதனால் சாளக்கிராமத்திற்கு சாநித்யம் குறையாது. ஆனால் ஸ்த்ரீகள் தொடும் வழக்கமில்லை. மேலும் பெரியோர்கள் சாளக்கிராமத்திற்குத் திருவாராதனை பண்ணுவதற்காக கையில் ஏளப்பண்ணிக்கொள்ளும் பொழுது ஸம்ஸ்காரங்களைச் செய்துவிட்டு எடுத்துக்கொள்வார்கள். பாலால் திருமஞ்சனம், மற்றும் என்னென்ன செய்ய வேண்டுமோ அதைப் பண்ணி விட்டு எடுத்துக்கொள்வார்கள்.
அன்று பாட்டி பண்ணினாளே என்று, அதை ஒரு முன்னோடியா வைத்துக்கொண்டு அதே மாதிரி தொட்டுத் திருவாராதனை பண்ணுவதை வழக்கமாக வைத்துக்கொள்ளக் கூடாது. சாளக்ராமத்தை ஸ்த்ரீகள் மானசீகமாக அம்சை பண்ணி பூஜை பண்ணலாம். சாளக்கிராம மூர்த்தி இருக்கக்கூடிய பெட்டியைச் சுற்றி துடைத்து, கோலம் போட்டு, சுற்றிவர புஷ்பத்தால் அலங்காரம் பண்ணி , விளக்கு ஏற்றி வைக்கலாம். மற்றபடி அதைத் தொட்டு திருவாராதனம் பண்னுவது என்பது ஸ்த்ரீகள் பண்ணக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top