ரஜஸ்வலை காலங்களில் உபன்யாசங்கள், நாமசங்கீர்த்தனங்கள், டிஜிட்டல் க்ரந்தங்கள் இவற்றை எல்லாம் பார்க்கவோ, கேட்கவோ, வாசிக்கவோ கூடாது. அது வழக்கத்தில் இல்லை. பாக்கி எல்லாக் காலங்களும் இருக்கும் பொழுது அந்தச் சமயங்களை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த மூன்று நாட்களில்தான் அதை வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்ற அவசியமில்லை. அதனால் அந்தச் சமயத்தை தவிர்த்து மற்றச் சமயங்களில் எல்லா விஷயங்களிலும் ஈடுபடுத்திக் கொள்வது நல்லது.