ரஜஸ்வலை காலத்தில் ஸ்லோகங்கள் சொல்லக்கூடாது. அது வழக்கத்தில் இல்லை. த்வய மந்த்ரத்தை எப்பொழுது வேண்டுமானாலும் அனுஸந்தானம் பண்ணலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது நிஷித்தம் இல்லையே தவிர அதற்காக அதை உட்கார்ந்து கொண்டு அனுஸந்தானம் பண்ணுவது என்பது உத்தம கல்பம் இல்லை.
ஆபத்து காலத்தில் சொல்லலாம் , அதைப் பற்றி ஒன்றும் இல்லை. அதற்காக அந்தச் சமயத்தில் தான் த்வயம் சொல்ல வேண்டும் என்பது கிடையாது. அந்தச் சமயத்தில் நிஷேதிக்கப்படவில்லை என்றாலும் சொல்வது உத்தமகல்பம் இல்லை.