ஸ்தோத்ரஙகள் வேகமா சேவிக்கலாமா. ஸ்தோத்ரஙகளில் பலஸ்ருதி மட்டிலும் சேவித்து வரலாமா? பலன் ஒன்றுதானா? ஸ்தோத்ரஙகள் இரண்டுபேராக சேவிக்கும்பொழுது, முதல் பங்க்தியை வாய்விட்டு சத்தமாக சேவித்து அடுத்த பங்க்தியை மனதிற்குள் சந்தையில் சேவிப்பதைப்போல சேவிப்போம். அது சரியா? ஸ்தோத்ரம் பூர்ணம் ஆகுமா. அதற்கு பலன் உண்டா. பெரிய ஸ்லோகங்கள் சேவிக்கும்பொழுது ஒருபாதி ஸ்லோகத்தை சேவித்துவிட்டு அடுத்தபாதியை சேவிக்காமல் மௌனமாகவும் இருக்கலாமா? தேவரீர் அடியேனுக்கு தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன். தன்யாஸ்மி அடியேன்

ஸ்தோத்ரங்களில் பலஶ்ருதி மட்டும் சேவிப்பது அத்தனை உசிதமில்லை. பலஶ்ருதி என்பது மொத்த ஶ்லோகமும் சொன்னால் கிட்டக்கூடியதைச் சொல்வதே தவிர அந்த ஶ்லோகத்தை மட்டும் சொல்வதனால் கிட்டுவதல்ல, ஆகையால் பூர்ணமாக சேவிப்பதே நல்லது. முடியாவிட்டால் த்யான ஶ்லோகம் என்றிருக்கும் அதை சேவிப்பார்கள் ஆனாலும் அது பூர்ணமாக சேவிப்பதற்குச் சமமாகாது.
ஸ்தோத்ரம் சேவிப்பதில் இரண்டு வகையுண்டு, ஒன்று நாமாகவே ஸ்தோத்ரம் சொல்வது, மற்றொன்று கோஷ்டியாக பாராயணம் பண்ணுவது. நாமாக சொல்லும்போது பூர்ணமாக நாமாகவே சொல்ல முடியும். கோஷ்டியாக பாராயணம் பண்ணும்போது ஒரு வ்யவஸ்தைக்காக முன்பாதி பின்பாதி என்று பிரித்திருக்கிறார்கள். அப்போது பூர்த்தியாக சொன்ன கணக்கென்று வந்துவிடும். மற்றவர்கள் சேவிக்கும்போது நாம் கேட்டுகொண்டிருந்தால் போதும்.
நாமாகச் சொல்லும்போது பூர்த்தியாக வாய்விட்டுச் சொல்லவேண்டும்.
ஏதாவது பலனுக்காக நாம் சொல்வதாயிருந்தால், பாராயணத்தில் சேவித்ததைக் கணக்காக சொல்லமுடியாது, பூர்த்தியாக வாய்விட்டுச் சொல்லவேண்டும். மாறாக பகவதனுபவம், பகவத்ப்ரீத்யர்த்தம் எனும்போது பாராயணத்தில் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டால் போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top