ஒரு ப்ராமணன் மணமகன் ஒரு ப்ராமணன் அல்லாத பெண்ணை மணந்தால், அவன் சந்தியாவந்தனம்கூட செய்யமுடியாத அளவுக்கு அவனது ப்ராமணத்வத்தை இழந்து விடுகிறான் என்று அடியேன் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் முந்தைய சுதர்சனம் வெளியீட்டில் பெண் பரந்யாஸம் செய்யலாம் என்று கூறப்பட்டருக்கிறது. அந்தச் சிறுவனுக்கு ஶாஸ்த்ரத்தின்படி சடங்குகளைச் செய்ய இன்னும் உரிமை இருக்கிறதா என்பதை தயவுசெய்து தெளிவுபடுத்தவும். தன்யாஸ்மி அடியேன்

ஒரு ப்ராமணன் மணமகன் ஒரு ப்ராமணன் அல்லாத பெண்ணை மணந்தால், கர்த்தா என்று வரும்போது சடங்குகளை இந்தச் சிறுவன்தான் செய்யவேண்டும். ஆனால், அவன் எந்த ரீதியில் செய்கிறான் என்பதிருக்கிறது அதாவது ப்ராமணனுக்குரிய ரீதியில் பண்ணமுடியாது வேறு எதாவது ரீதியில் பண்ணலாம் என்றாகிவிடும்.
பரந்யாஸம் என்பது ஜாதி சம்பந்தப்பட்ட விஷயமன்று, யாராக இருந்தாலும், எப்படி இருந்தாலும் பரந்யாஸம் பண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top